Blog Hero Image

ஆதாயத்துடன் ஆத்ம திருப்தி தரும் தொழில்

தொடர்ந்து படிக்க
Blog Hero Image

நெய்ப்பாயசம்

தொடர்ந்து படிக்க
Blog Hero Image

பெண் குழந்தைகளுக்கான சிமிலி உருண்டை

தொடர்ந்து படிக்க
Blog Hero Image

தமிழில் காப்பியங்கள்

தொடர்ந்து படிக்க
Blog Hero Image

நேர்மையுடன் சித்தரிக்கப்பட்ட தூய்மையான பெண்மணி.

தொடர்ந்து படிக்க
இதழ்கள்

இதழ்கள்

சு.மூர்த்தி, ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு. ஈரோடு;

கல்வி வணிகத்திலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்படட்டும்...

குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் என்று நாம் எல்லோரும் பெருமையாகப் பேசுகிறோம். ஆனால் இன்றைய வணிக உலகத்தில் குழந்தைகள் வணிகர்களின் “சந்தைக்கான பயனாளிகளாக”ப் பயன்படுத்தப்படுகின்றனர். கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு, இணையம், சமூக ஊடகம் போன்ற எல்லாவகையான சேவைகளிலும் குழந்தைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வணிக நலன்களின் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றனர். முடியாட்சிக் காலத்தைவிட தற்போதைய சந்தைக் காலம் குழந்தைகளுக்கு அநீதிகள் நிறைந்ததாகவே உள்ளது. மக்களாட்சி அரசு அமைந்தபிறகு குழந்தைகள் நலனுக்காக பல்வேறு கொள்கைகள், சட்டங்கள் உலக அளவில் வகுக்கப்பட்டுள்ளன. 1959ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “குழந்தைகள் உரிமைகள் அறிவிப்பின்” 20ஆம் ஆண்டு நினைவாக 1979 ஆம் ஆண்டு “உலக குழந்தைகள் ஆண்டு” கொண்டாடப்பட்டது. ;

தொடர்ந்து படிக்க
கல்வி

பள்ளியிடம் குழந்தையின் எதிர்பார்ப்பு

ஜூன் மாதம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தாச்சு. பிள்ளைகள் குதுகலத்துடன் ஒரு வகுப்பில் இருந்து முன்னேறி அடுத்த வகுப்பிற்கு ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்புடன் நுழைந்திருக்கிறார்கள். சில பள்ளிகளில் இருகரம் நீட்டி பிள்ளைகளை ஆரவாரத்துடன் வரவேற்றக் காட்சிகளைக் கண்டோம். புது வகுப்பு, புது ஆசிரியர்கள் யாரும் வருவார்களா? புது நண்பர்கள் கிடைப்பார்களா? என பல கேள்விகளுக்கு விடை தேடி ஒரு புது சூழலுக்கு தங்களை தயார் செய்து கொண்டு எண்ணற்ற கனவுகளோடு பிள்ளைகள் கிளம்பும் அந்த பரபரப்பான காலை பொழுதை ரசித்து பார்க்க எனக்கு பிடிக்கும். தங்கள் தந்தை தாய்மார்களிடம் பேசி கொண்டு, நண்பர்களிடம் சலசலத்தபடி நடந்து கொண்டு, இரு சக்கர வாகனங்களில், ஆட்டோவில், பள்ளி பேருந்துகளில் குழந்தைகள் செல்வதை அன்றும் ரசித்து பார்த்து கொண்டிருந்தேன், எங்கள் பக்கத்து வீட்டில் 3ஆம் வகுப்பு படிக்கும் சுட்டி பெண்ணின் (என்னிடம் ஓவியம் கற்றுக் கொள்ள வருபவள்) வாடிய முகம் எனக்கு வித்தியாசமாக பட்டது, என்னடா ? பள்ளிக்கூடம் போக பிடிக்கவில்லையா? ;

இளைஞர்

இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?

சாத்தியமற்றதை கற்பனை செய்யத் துணிந்தவர்களே மனித வரம்புகளை உடைத்தவர்கள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. அறிவியல், மருத்துவம், விளையாட்டு, கலை போன்ற மனித முயற்சிகளின் ஒவ்வொரு துறையிலும், சாத்தியமற்றதை கற்பனை செய்து சாதித்தவர்களின் பெயர்கள் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. ஆகவே, இளமையிலேயே நீங்கள் படைப்பாற்றலான சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அழகான வாழ்க்கை ஒரே முறை கிடைக்கும் வாய்ப்பு; உங்கள் சாதனைகளால் நீங்கள் நினைவுகூரப்பட வேண்டும். அதற்கு உங்கள் வாழ்க்கையை உயர்ந்த இலக்குடன் வடிவமைத்து, அந்த இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்.;

பெண்கள்

ஆண்.. பெண்.. குடும்பம்

நம் சமூகத்தில் திருமணம் என்பது இரண்டு மனிதர்களின் வாழ்க்கையை இணைக்கும் உறவாக மட்டுமல்ல, பல நேரங்களில் அது பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மெதுவாகக் கட்டுப்படுத்த தொடங்கும் ஒரு அமைப்பாகவும் மாறிவிடுகிறது. திருமணத்திற்கு முன்பு “உன் வாழ்க்கையை உருவாக்கு”, “உன் கனவுகளைத் துரத்து”, “சாதித்துக் காட்டு” என்று உற்சாகப்படுத்தும் அதே சமூகம், திருமணத்திற்குப் பிறகு “இனி குடும்பத்தை மட்டும் பார்” என்று சொல்ல ஆரம்பிக்கிறது. அங்குத் துவங்குகிறது முரண்பாடு. அதாவது, திருமணத்துக்கு முன்பு வரை ஒரு பெண் படிக்க வேண்டும் என்று நினைக்கும் வரை சமூகம் கைத்தட்டும். முன்னேற வேண்டும் என்று பேசும் போது பாராட்டும். ஆனால் அதே பெண் திருமணத்திற்குப் பிறகும் தன்னுடைய கனவுகளை உயிரோடு வைத்திருக்க முயற்சித்தால், அதெல்லாம் சரிப்படாது எனச் சொல்லி அவரைப் பொறுப்பில்லாதவராகப் பார்க்க ஆரம்பித்துவிடும்.;

நிதி நிர்வாகம்

குறையும் ரூபாயின் மதிப்பு: தனி நபர் என்ன செய்யலாம்?

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அந்த நாட்டின் நாணயம் (பணம்) முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் நாட்டின் பொருளாதார நிலையை நிர்ணயிப்பதில் அந்த நாட்டின் பணத்தின் மதிப்பு மிக முக்கியமான அளவீடாக எடுத்துக்கொள்ளப்படும் இன்றைய சூழலில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துவருகிறது. இது மக்களை பல்வேறு வகைகளில் பாதிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். துவக்ககாலம் - சூர்பேரரசை நிறுவிய சோச்காசூரி 16ஆம் நூற்றாண்டில் வெள்ளிக்காசு எனப் பொருள் கொண்ட ‘ரூப்யர்” என்பதை அறிமுகப்படுத்தினார். இந்த நாணயம் வெள்ளியால் ஆனதாக இருந்தது. 178 கழஞ்சுகள் அல்லது 11.534 கிலோ எடை கொண்டதாக இருந்தது. ;

தொடர்பு கொள்ளுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

முகவரி

பட்டறிவுப் பதிப்பகம், தானம் அறக்கட்டளை

எங்களை அழைக்கவும்

9876543210

மின்னஞ்சல்

reflectionbooks@gmail.com

ஏற்றப்படுகிறது...
உங்கள் செய்தி வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. நன்றி!